samedi 3 mai 2014

வா வா என் பொன் வானப் பூச்சரமே ....


வா வா என் பொன் வானப் பூச்சரமே - நீ
சாய்ந்தாடும் மஞ்சம் என் நெஞ்சம் ஆனால்
உன் வளை கொண்ட கைகள்
என் தோள் மாலை ஆடும்
வசந்தத்தின் ஆதாரமே...
 
நான் கொண்ட வரமோ நீ தந்த சுகமோ
கோதும் விரலுக்குள் வீழ்ந்ததடி
கார் வண்ணக் கூந்தல் கலைந்தாடி நின்று
கை வீசி அழைத்து கதை நூறு சொல்ல
செந்தாளம் பூவும் புண்பட்டு ஏங்கி
பொய்ச்சாட்சி விட்டு மெய்யாகிப் போனதடி
விழிகாணும் விழிக்குள் வீழ்ந்தேனே நானும்
நீச்சல் அறியாத போதும்
காதல் கரைக் கம்ப விளக்கில்
மின்சாரம் தொட்டு
எளிதான வாழ்வில் பூ மஞ்சம் சேர்ந்தேனடி
வா வா என் பொன் வானப் பூச்சரமே ....

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...