vendredi 2 mai 2014

என்னை பெத்தவங்க யாரு...


என்னை பெத்தவங்க யாரு - தோளில்
தொட்டில் போட்டது யாரு
சொந்தம் என்று சொல்லிக்கொள்ள
எந்த இறைவன் வருவான் கூறு..?

காம உறவிலே கள்ளக் கருவிலே
வந்து வீழ்ந்தேனா..?
பெத்துப் போடு குப்பையிலே என
நான்தான் கேட்டேனா...
எந்த உறவோ எந்த மதமோ
எந்தச் சாமியை நான் கேட்பேன்..?
எவனுக்கடி ஆத்தா என்னை பெத்தே
உன்னை நான் எங்கு காண்பேன்..?
ஊருக்குள்ளே காணும் முகம் எல்லாம்
என் உறவோ எனத் தேடுகிறேன்..!
பிஞ்சு முகத்தை பார்த்தாச்சும் பெத்தவளே
என், அப்பன் யாரென கூறாயோ....?

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...