mardi 21 juillet 2015

சங்கமக் கடல் ....

உன்னை, திருடி என் எண்ணக் கோட்டையில்
பூட்டி வைத்தேன்..
என் விழிகளை திருடி உன் விழிகளுக்குள்
நீ மூடிவிட்டாய்!
உன் விழி வாசல் வந்த பின்புதான் உணர்ந்தேன்
நான் கிரகப்பிரவேசம் செய்திருக்கிறேன் என்பதை

உன் வண்ண இதழ்களால் எனக்கு மட்டும்
நீ இரகசியம் சொன்னாய்..
அந்த இரகசியத்தை உனக்கு மட்டும்
நானும் சொன்னேன்!
I love  you ...  I love  you ...
இரு இதயங்களும் நதிகளானது எப்படி
வாழ்க்கை எனும் சங்கமக் கடலில்
ஓடோடி வந்து சங்கமித்துக்கொண்டன
பிரிவினை என்பதே இனி இல்லை
இல்லறம் என்பது இதுதானோ
நல்லறம் காண்போம் என் இனியவளே ....
Kavignar Valvai Suyen

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...