mardi 28 juillet 2015

மனிதருள் மாணிக்கம் அப்துல் கலாமுக்கு ஆத்ம அஞ்சலி....

ஆத்ம விரிச்சிகன் அன்புடை நாயகன் அப்துல் கலாம்

அறிவியல் ஆய்வின் அரசுரிமை நாயகன்

இல்லை என்று இல்லாது இந்தியம் மிகையுற

மரைக்காயர் ஜைனுலாப்தீன் ஆஷியம்மா

ஆளக்கடல் முத்தாய் ,

உன்னை முகிழ்ந் தெடத்து தந்தாளே....

 

இலக்கியத் தாயின் இறையடி எழுத்தே

இளைஞர் கூடலின் இணையடி நட்பே

விரலிசை பாட்டின் வீணையின் தோழனே

பாரத தேசத்தின் கணை உயர் தமிழ் கலாமே

எல்லையில்லா நாயகா பாரதத்தின் பணி முகத் தலைவா

பத்மபூஷன், பாரதரத்னா, ஆர்யபட்டா , பத்மவிபூஷன் என

அப்துல் கலாம் உன்னிடத்தில் அற்பணம் ஆனதினால்

விருதுகள் யாவுமே விரலிசை நயம் ஆடிடக் கண்டேன் .....



ஈரடித் திருக் குறள் நிறை நீள் வளி நடந்தவா

கற்புடை கவியினில் நற் குழந்தைகளும் ஈன்று

நாடே உன் தாய் வீடாய் வாழ்ந்த மாமேதையே

திருவே, நெருப்பின் சிறகுகளி சுயசரிதை எழுதி

விடை கூறிச் சென்றாயோ ......

அறிஞனே விஞ்ஞான உலகுன்னை அழைக்கின்றது

தடை இல்லை தமிழா ஏவுகணை ஏவலே

தாய்த் தேசம் உன்னை தாலாட்டும் வேளையிது

தங்கமே தவப்புதல்வா அப்துல் கலாம் நீ இளைப்பாறு...
Kavignar Valvai Suyen

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...