mercredi 20 mai 2015

முகாரி முத்தம் ...


வலிகளைச் சுமந்து வளைந்துவிட்டோம்
முகாரி முத்தமே எங்கள் முத்தம் எங்கும்
அடுப்பில் வைத்த விறகுக்குத் தெரியும்
உலை வைக்கவில்லை ஊருக்கும் தெரியாது
ஆறு நாட்களாய் அது அப்படியே கிடக்கின்றது
இராகங்களின் ஈர்ப்பு காலத்தால் அழிவதில்லை
புதிய வார்ப்புக்களில் நாம் புன்னகை சொய்தாலும்
ஏழை குடிலை கோபுர நிழலும் தொடவில்லை
கருணைக் கெலை கேக்கிறது தாய் விறகு!
தீக்குச்சியிடம்!
Kavignar Valvai Suyen

4 commentaires:

  1. ''...ஏழை குடிலை கோபுர நிழலும் தொடவில்லை...'''

    வலியுடை வரிகள் எதை
    எழுதுவது என்று தெரியவில்லை....



    RépondreSupprimer
    Réponses
    1. வலியதை நீக்கி வல்லமை பெற்றிட இறையடி தேடுவோம் சகோதரி வேதா...

      Supprimer
  2. Réponses
    1. உருகும் இதயமே பெருகுது அன்பு நன்றி...

      Supprimer

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...