samedi 16 mai 2015

கற்பும் கருவறையும்...


தொலைந்து போ என்றுதானே சொன்னேன்
அருகில் வந்து அன்பு முத்தம் தந்தது
அந்த அமுத நிலவு...
நெஞ்சம் நிறைத்துக் கொட்டிய வலியில்
கண்களிலே நீரின் தேக்கம்
ஒவ்வொரு துளிகளிலும் ஓராயிரம் அர்த்தங்கள்
ஒவ்வொன்றாய் தெரிவு செய்தேன்
எதையுமே பிரித்துப் பார்க்க முடியவில்லை
மனசு வெள்ளை மனசுக்குள் கள்ளம் இல்லை
வாழ்க்கைக் கோலத்தில் வண்ணம் சிதைந்தேனா
தீர்க்கப்படா வரவை தந்து தீய்கின்றது
கற்பும் கருவறையும்,
காரணங்கள் கரையவில்லை!
பத்தவைத்து பிய்த்துப் போனவன் எங்கே
தீய்ந்து எரிகின்றன பெண்களெனும் பொம்மைகளே..
Kavignar Valvai Suyen

1 commentaire:

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...