mercredi 25 octobre 2017

கண்ணீர் அஞ்சலி....


ஆழ்ந்த இரங்கல் ஐயன் குறளோவியனுக்கு...
அன்புடையீர் ஐயனே இடி வீழ்ந்த செய்தியானது என் செவிகளில் தங்களின் மறைவு, என் வாழ்வில் நான் கண்ட பண்புடை பாவலன் நீங்கள், என் இலக்கிய பயணத்தில் ஓராண்டுகள் என்னை வளி நடத்திய சான்றோன் நீங்கள், திருக் குறளை திரு மந்திரமாய் செப்பும் தன்மானத் தமிழன் நீங்கள், தங்களின் அன்பு மொழிதனை இனி என்று கேட்பேனையா.. விழி நீர் விடை தேடி சொரிகிறது தாய்த் தமிழ் பற்றாளனை துலைத்துவிட்டேனென்று.... இதயம் துடிக்க எதையும் தேடுங்கள் இதையும் ஏற்றுக் கொள்ளுங்கள் எனும் தங்களின் அன்போசை ஒலி கேட்கிறது, ஆலயம் செல்ல மறுத்து தங்களின் ஆ
த்மாவுடன் இணைகிறேன் ஐயா... ஐயனே தங்களின் ஆத்மா சாந்தியுறுக, ஓம் சாந்தி சாந்தி சாந்தி....
பாவலர் வல்வை சுயேன் எனும் பெயரை எனக்கு சூடித் தந்த பெருந்தகையே நீங்கள்தானே... அன்புடையீர் ஐயா அன்புடன் உங்களின் பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...