vendredi 6 octobre 2017

தீபங்கள் ஒளி இழந்தால்...

மீட்டாத வீணையே வா... வா... மீட்டும் விரல் அழைக்கிறது
சுதியும் லயமும் உன் இதயம் சுரங்கள் ஏழும் உன் சுவாசம்
வாழ்விழந்த மலரென்று மாலை சேரா மலருண்டோ
மூலி என்ற வேலிக்குள் இதயச் சரங்கள் வாடுவதோ
தீபங்கள் ஒளி இழந்தால் தெய்வங்களும் உறங்காது
தாபங்கள் தணியாதெனில் சந்ததியும் வாழாது
வசந்த காலக் குயிலே நீயும் இசைந்து பாடு இனிய ராகம்
வாழ்ந்தே உதிர்வோம் வாடா மலரே வா... வா...
உதிர்காலம் எதுவென முதுமையே முடிவுரை எழுதும்


பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...