jeudi 12 octobre 2017

கரிச் சட்டி பொட்டு !!!

மனசுக்குள் கொஞ்சுதே வளை ஓசை
உயிர் இல்லா மாளிகையில்
ஒற்றைக் கிளி ஊமையானேன்

மஞ்சள் பூசி மருதாணி இட்ட அழகில்
கண் பட்டுடுமே என
கன்னத்தில்,
நீ தொட்ட இடம் தேடுதடா
உன் கண் பட்ட இடம் வாட்டுதடா

ஊரார் சொல்லும் வார்த்தைகளை
நெரிஞ்சியென தைக்கவிட்டு 
முகவுரை அழித்து முடிவுரை தந்தாயோ
அமங்கலி எங்கிறார் என்னை, இது நியம்தானா.....


பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...