samedi 29 avril 2017

பக்த்தன் நானே உன்மேல் பித்தனடி !!!


காற்றோடு கரம் கோத்து கைவீசிப் போகும் அழகே

கல்த்தறையில் உன் பாதம் துயருறக்கூடாதென்றே

பஞ்சணை விரித்த பசும் புற்கள்

உன் பாதம் கொஞ்சக் கொஞ்ச

சலங்கை நாதம் கேக்கிதடி....

வண்ணம் கொண்ட வளர் நிலாவே  

உன் வதனம் வாடாதிருக்க

நிழல் தூவிய முகில் களையும்

உன்னோடு உலா கூட்டிப் போகிறாய்



உன்னோடு வாழவே ஊதாப் பூவாய்

உன் காலடியில் கிடக்கிறேன்

என்னை மிதித்து நீ எங்கே போகிறாய்  

பக்த்தன் நானே உன்மேல் பித்தனடி...



பவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...