mardi 18 avril 2017

விற்பனைக்கல்ல நிந்தன் காதல்...


விந்தை அல்லடி நீயே உலகின் ஆதி மொழி     

எழுத்தாணி கொண்டு எழுதினேன் உன்னை

இந்தப் பிரபஞ்சமே என்னை திரும்பிப் பார்க்கிறது

என் தாய்த் தமிழே நீயே என் காதல் மொழி   

எதுகை மோனை தொடும் முன்னே

ஏதோ என்னை செய்கின்றாய்

பரிந் துரைக்கிறேன்

உன் பார்வை ஒன்றே போதும் எனக்கு

பகை நூறு வரினும் பஸ்பம் செய்திடுவேன்



செந்நீரும் கண்ணீரும் சேர்ந்து செய்த கலவை நான்

நன்னீரும் உவர் நீரும் பஞ்சாய் பகர்ந்தெடுத்து

மும்மாரி பொழிகிறது என் மேல்

கண்டங்கள் கடந்து வந்தேன்

கானல் நிலம் கண்டு வந்தேன்

கற்பனைக் கெட்டா மொழி அழகே

வென்று வா மகனே என

எழுதிவிட்டாய் என் நாவில் உன்னை

விற்பனைக்கல்ல நிந்தன் மேல் நான் கொண்ட காதல்

அன்பால் அரவணைத்து அகிலத்தையும் அறிவேன் அன்பே



பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...