mardi 7 juin 2016

சூடான சுந்தரி நான் !!!



மழைக்கால குளிரிலும் சூடான சுந்தரி நான்
அங்காடித் தெருவிலும் அன்போடு காத்திருப்பேன்
உன் உதடு உரச உரச கத கதப்பை ஊட்டுவேன்
காலை மாலையும் உனைச்சேர காத்திருப்பேன்
காதலா காதலா நின் காதல் நான் மறவேன்
நின் பணியுற்று நீ திரும்பும் போதும்
உன்னை காண விழித்திருப்பேன்
உதய கீதம் பாடுவேன்
இரவின் இனிமை சேருவேன்
உனக்காகவே பிறந்தவள் நான்
எனக்காக கொண்டுவா.. காசு.. காசு..
கல்லாவில் கடைக்காறன்
இனாமாக தரமாட்டான் என்னை!

பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...