mercredi 1 avril 2015

பூங்கொடியே புன்னகை பூச்சரமே...


பூங்கொடியே புன்னகை பூச்சரமே
உன் தோகை வர்ணம் கண்டு
தொட்டிலில் ஆடி மகிழ்ந்தேன்
அன்றாடம் நீ உதிர்ந்த புன்னகையில்
அல்லியிடம் மயங்கும் திங்களும் தோர்த்ததடி
 
உன் சிரிப்புக்குத் தாழிட்டு நீ சினம் கொண்டதால்
இருள் மூழ்கிப் போச்சுதடி நம் வீட்டு நந்தவனம்
கார் இருளில் உன்னைத் துலைத்து
என்னை இழக்க எனக்கேது சம்மதம்
மரணத்தின் மன்றம் என்னை அழைக்கிறது
உன் புன்னகைச் சரம்தனை உதிராயோ
சந்தோசச் சாரல் தொட்டு நன்றி தந்து போகிறேன்..
Kavignar Valvai Suyen

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...