samedi 25 avril 2015

பசும் புல்லின் பனித்துளிகள்...


கால நியதியில் மறைந்துவிட்டான் இறைவன்
ஆயுள் குறில் இல்லாதவன் அவன்!
அஞ்ஞாத வாசத்தின் ஆளுமை அற்றவன் மனிதன்
ஆயுளே அழிந்துவிடும் நீ திரும்பும் முன்னே
ஊர் உன்னை ஏய்க்கும் உலைக்களம் போகாதே
ஒரு துளி கண்ணீரில் ஓராயிரம் வலிகள்
வைராக்கியம் கொள் மறுமலர்ச்சி மிகை தரும்
மழைத்துளியின் பெருமைதனை
விழிகள் அறியாமல் விரதம் கொண்டதில்லை
பகலவன் எரித்தாலும் பசும் புல்லின் பனித்துளிகள்
உன்னை அழைக்கிறது...
Kavignar Valvai Suyen

2 commentaires:

  1. Réponses
    1. அருமை அருமையென பாராட்டுத் தந்தீர்கள் தனபாலன் மகிழ்ச்சி...

      Supprimer

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...