vendredi 6 mars 2015

இனப் புயல் நிறுத்தி சரித்திரம் படைப்போம் ...


இனப் புயல் இங்கு வனப் புயலானதடா தம்பி – தினப்
புயலாலே அகதியாய் இன்னும் அலைவதேனடா
மூடக் கொள்கையில் இன்னுமா நீ உன்முதுகை பாரடா
கேழ்விக் குறியாய் வளைந்த வாழ்விற்கு நீதி தேடடா
தீண்டாமை சொல்லி யாதித் தீயிலே தீய்ந்து போகிறாய்
சுதந்திர வாழ்வை சுறண்டலில் தொலைத்து  
சிறையில் தேடுறாய்...
 
மானம் ஒன்றுதான் மரபுப் போர் உடை
மசக்கையாலே நீ மாற்றான் கால் நிலை
அகரம் எழுதி அறிவைச் சேர்த்த
அழகு ஈழமடா
உலைக்களத்தாலே உருகிக்கிடக்கிதே
உன் உறவின் ரெத்தமடா
கடித்தால் பறிக்கும் கழுத்துக் குப்பியே
மானச் சேலையடா
பூவரசம் வேலிக்குள் புலுணிக் குஞ்சுகள்
புலியாய் மாறி புனர் ஜென்மம் எடுக்கலையா
உலக வானில் தமிழனின் சான்றாய்
புலிக்கொடி உயரலையா
கனிந்த பழம்தான் தமிழரின் ஈழம்
கையில் கிடைக்கும் காலம் இது
இணைக் கரம் பற்றி விடிவினை தேடு..
 
சமர்க்களம் ஆடிய வேங்கைகளாலே மலர்ந்தது ஈழம்
அது வஞ்சனைக் கொடியவர் வாரி இறைத்த
கொடும் தீயினில் வீழ்ந்து இருண்டது மீண்டும்
நம் சந்ததி வாழ சரித்திரம் படைப்போம்
சாயம் வெழுக்கவில்லை துணிந்தே வெல்வோம்
கிழக்கை தோண்டிட ஒன்றாய் வாடா
நன்றே விடியும் நாளை நம் தேசம்
உலகப் பந்திலே தமிழனின் காலம்
வாடா தம்பி வாடா...
இனப் புயல் நிறுத்தி சரித்திரம் படைப்போம்
தமிழரின் தாகம் தமிழீழத் தாகமடா..
 
Kavignar Valvai Suyen

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...