mercredi 30 juillet 2014
கட்சி உண்டு கொள்கை உண்டு ..
கட்சி உண்டு கொள்கை உண்டு
உத்தமரும் நினைவில் உண்டுதாய்க்குலத்தின் தணையனுங்க நானு
உயிர் உள்ளவரை போர் இடுவேன்..
உரிமைதனை வென்றுடுவேன்..
பெண் குலத்தின் சுதந்திரத்தை
கூண்டில் இட்டு பூட்டி வைக்கும்
தீயவரை வேர் அறுப்பேன்..
நாளைத் தேர்தல்ச் சாவடியில்
கள்ள வோட்டு போடாதீங்க
தலைவன் என்னை ஆதரீங்க
என் கட்சி ஜே கே கட்சி..
mardi 29 juillet 2014
lundi 28 juillet 2014
dimanche 27 juillet 2014
முற்றத்து மூன்றாம் பிறை என்கிறார் என்னை ..
முற்றத்து மூன்றாம் பிறை என்கிறார்
என்னை
அச்சத்தில் இன்னும் நான் அகதி
முகாமில் .!மாற்றான் இட்ட அனல் காலம்
மாசொடு திங்களெல்லாம்
என்னைச் சுத்தி எரிக்கிறது ..
மூத்தகுடியின் முன் பிறந்த என் தாய்த் தமிழே
நீ செம் மொழியான பின்னும்
செங்குருதிச் சிறைக் காட்டில்
இன்னும் நானும் நீயும் .!
என்று தணியும் தமிழீழத் தாகம் .?
தளிருக்கும் இல்லை இங்கு வசந்த காலம் ..
samedi 26 juillet 2014
vendredi 25 juillet 2014
எனக்குள்ளே எனக்குள்ளே என்னாச்சு ..
எனக்குள்ளே
எனக்குள்ளே என்னாச்சு
ஆசை
மழை கண்ட தூறல் தன்னை கொஞ்சம் நிறுத்திவிட்டு
என்னை ஏதேதோ ஏதேதோ செய்யுதடா .. ..
என் உஷ்ணக் காய்ச்சலில் காய்ந்த ஜன்னலோ
சாரல் நனைந்த குளிர் விட்டு
முத்தச் சத்தம் கொடுத்து விரகம் மூட்டுதடா .. ..
மாதென் செய்வேன் .. ..?
இதழ் ரசம்தானே இரவுக்கு ஆகாரம்
என்னைத் தொடுவது நீயாகட்டும்
நான்கு இதழ்களும் நான்மறை எழுதட்டும்
விடியலும் உட் புகாமல் ஜன்னலைச் சாத்திவிட்டு
குதூகலித்து காத்திருக்கிறது மனசு ...
jeudi 24 juillet 2014
dimanche 20 juillet 2014
samedi 19 juillet 2014
என்னவளே உன் பார்வையில் கனிந்ததடி ..
என்னவளே உன் பார்வையில்
கனிந்ததடி
என் வாழ்வின் வசந்தம் ..குடும்பம் எனும் ஆலயத்திற்குள்
நீக்கமற நிறைந்திருந்து பன் முகம் காட்டி
பரவசம் தருகிறாய் ..
அன்பெனும் அரவணைப்பை
அன்னையிடம் கண்ட பின்
உன்னிடம் தானே கண்டேன் இதுவரையில் ..
கோபத்தில் நீ கொதிக்கும் சூரியன்
பாசத்தில் நீ பனி மலைச் சாரல்
பெற்றெடுத்த குஞ்சுகள் பிள்ளைகள்தான்
கட்டு மீறலாம் கவலை நீரலைகள்
உச்சி வந்த சூரியன் உள்ளங் கால் சுட்டாலும்
நீ தந்த உச்சக் குளிரின் பாசச் சாரலில்
நின்றே வாழுகிறார் அவர் என்றும் மறவார் ..
வென்று விட்டாய் நீ
தொன்று தொட்ட வாழ்வை
நானும் நன்றே நனைகிறேன்
வாழ்க்கைச் சோலையில்
பனித் துளி கொஞ்சும் பசும் புல்லாய் ...
vendredi 18 juillet 2014
என் தாய் தந்தையர் எனக்குத் தந்த தங்க வளையலில் ..
என் தாய் தந்தையர் எனக்குத்
தந்த
தங்க
வளையலில்அவர்கள் என் மேல் விரித்திருக்கும்
பாசக் குடை கண்டேன் .. ..
அடகுக் கடையில் என் வளையல்
வட்டி போட்ட குட்டிக்காக
விலையான போதில்
எங்கள் வீட்டின் ஏழ்மை கண்டேன் .. ..
தங்கம் என்ன வைரம் என்ன
பொன்னும் மணியுமாய் பாச நெற்கள்
விளைந்து கிடக்கும் வயல்தானே
எங்கள் வீடு ..
அன்போடு அறுபடை செய்து
என்றும் இன்பமாய் வாழ்கிறோம் .. ..
jeudi 17 juillet 2014
ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை ..
ஆடிப் பிறப்புக்கு நாளை
விடுதலை
ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே
..பாட்டில் வடித்து ஏட்டில் கிடக்கிது
பாழும் கிணற்றில் பாசிச் சுவரொடு
கூண்டில் கிடப்பதேன் தோழர்களே ..
ஆடிக் கறக்கணும் ஆவன செய்யணும்
வேடிக்கை மனிதரை வேரோடு
சாய்க்கணும் ..
காலம் எமக்கொரு காலம் பிறக்குது
தீய காவல் அரன்களை
காற்றில் கலைக்கணும் ..
பூத்திரி முகத்தில் பூச்சுடர் ஏற்றி
பாசிப் பயருடன் கூழுங் குடிக்கணும்
ஏற்றம் அழைக்குது ஈழம் தெரியுது
எழுந்து வாருங்கள் எம் தோழர்களே...
mercredi 16 juillet 2014
வண்டி கட்டி போறீங்கையா வரிசையில் ..
வண்டி கட்டி போறீங்கையா வரிசையில் –
வறு
மை இல்லாச் சாலை வீதி உங்களுக்கானது
...கையளவு கஞ்சியிலும் நனையவில்லை என் வயிறு
ஏழ்மை உற்ற சேரிச் சாலை எங்களுக்கானது ...
உழைப்புக்குரிய ஊதியம் ஒரு நாள்
என்னையும் சேரும்
அன்றே திரிப்பித் தருவேன்
இன்று நீங்கள் தரும்
ஒத்தை ரூபாய் நாணயத்தை
நாணயத்தின் ஒரு முகம் நீங்கள் ..
மறு புறம் நான் ..
mardi 15 juillet 2014
Inscription à :
Articles (Atom)
எவர்கிறீன் !!! அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...
-
பெற்றவள் உனக்கழித்த பெறு பேற்றில் சுற்றம் சூழ வாழ்ந் துயர்ந்து சுறண்டலிலே தேய்ந்து கெட்டு செத்துவிடும் மானிடா உன் பிறப்பு முதல் உயரிய உயி...
-
காலை எழுந்தவுடன் படிப்பு பின்னர் கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு மாலை முழுதும் விளையாட்டு என்றே வளக்கப்படுத்திக் கொள்ளு பாப்பா...
-
கண்ணுக்குட்டி என்னை தண்ணீர் தந்து வளர்த்தவன் நீதான் நிழல் தந்து நின்ற என்னை நீயே வெட்டிவிட்டு விறகென்றாய் கலங்கினேன் ..! இருந்து...