samedi 18 novembre 2017

பாரியின் வம்சம் நீ ...

பகலிலும் ஒளிரும் பதுமையே
கரு விழி கலந்தாய் பாலமுதே
ஏழு கடல் ஏறி ஓடி வந்தேன் நானே
உன் கால் தடம் கண்டே கரையினை தொட்டேன்

கொலு சொலி சொல்லும் உன் பெயர்தானடா
மெட்டி வளைவிலும் ஒட்டியே நிற்கிறாய்

போதும் எனக்கிந்த வதிவிடம் தேவி
போ என்று தள்ளாதே
போகுமிடம் அறியேன் நானே  

நாழிகை நொடிக்குள் துடிக்கிதே இதயம்
தின மணி முள்ளாய் சுற்றியே வாறேன்
விண் மேகம் உரசும் மின்சார கதிரே
இடி ஓசை வரும் முன்னே
மடி சாய்ந்தேன் நானே நானே
உதயம் வரும்வரை உறங்காமல் கொடு கொடு
உன் பேர் சொல்லும் பிள்ளை பெற்றே நான் தாறேன்

கணையாழி தந்தேனடி கலங்காமல் காத்திரு
துஷ்யந்தன் அல்ல நான் துவளாதே தூவானம் அடிக்கிது

உன் தேகம் எனக்கு தேக்கம் தோப்பே தோப்பே
என்னை படர வைத்தாய் நீ பாரியின் வம்சமே

களம் காணும் மன்னா உன் தேரோட்டி நானே நானே
என் புருவ வில்லேந்தி கொன்று வா பகைவனை
சாம்றாட்சிய வாழ்வில் சந்தோசம் காண்போமே


பாவலர் வல்வை சுயேன்        

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...