jeudi 2 novembre 2017

ஏர் முனை இல்லையேல் !!!

வான மழை பெய்யாதோ என
பூமி உடைந்து விண் நோக்க
விதைந்த நெற்கள் வரப்புயர் வின்றி கூனி குறுக
ஏர் முனை பதிந்த நிலம் ஏற்றம் இன்றி எரிகிறதே

வாராதோ மழையென வாடி உளவன் நொந்தும்
வர்ணன் வாராதிடத்தில் வந்து போன அரசு
வழங்கிச் செல்கிறது மரணச் சன்றிதழ்
எள்ளி நகை செய்யாதீர்
ஏர் முனை இல்லையேல் நீயும் இல்லை

பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...