lundi 31 octobre 2016

தாமதம் ஏனடி தையலே !!!



தோகை மயிலிறகாய் இமை வீசும் சாமரையே - கூர்
அம்போ உன் விழிகள் என் இதயத்தில் ஈட்டி முனை
நேர் இழையால் கட்டி அணைத்து
கன்னம் இட்டு கன்னம் வைத்தாய் !
தொட்ட குறை தீர்க்கவோ தோகை இறகெடுத்து
மை வண்ணம் தீட்டுகிறாய்     
அச்சாரம் நான் தாறேன் முத்தாரம் போதுமடி 
தந்துவிட்டு போ,  பூவிதழ் முத்தம்
நாளைய புலர்வுக்குள் உன்னிடமே தந்திடுவேன்
தாமதம் ஏனடி தையலே, நீ எனக்காக பிறந்தவளே....

பாவலர் வல்வை சுஜேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...