mercredi 2 décembre 2015

தாலாட்ட வருவாயா தாயே என் தாயே...



இருள் வந்து இமை மூட விழி உறங்கலையே தாயே
தாயே என் தாயே நீ இன்றி என் விழி உறங்கலையே
மன ஓடம் நதியினிலே இரு கரையும் தீ யினிலே
ஓடம் ஓடும் என்றே நான் இருந்தேன்
ஓடவில்லை மூழ்குதம்மா….
நாற் புறமும் நீசர் நிலை நான் உறங்க அமைதி இல்லை
தாலாட்ட வருவாயா தாயே என் தாயே
அடித்தவரை சொல்லி அழுகிறேன் அணைத்திடத்தான் நீ இல்லை
எவர் என்னை அடித்தாலும் அவரை நீ அடித்திடுவாய்
அவர் அழுது நீர் மல்க நான் மகிழ்ந்து உறங்கிடுவேன்
தூயவளே என் தாயே எனக்காக உறவை அடிக்கும் உத்தமியே
உன்போல் யாரம்மா நீயே என் கோயிலம்மா

அந்த நாள் அவ்வேளை என் பெயரே நான் அறியேன்
அடித்தாரின் பெயர் சொல்ல ஞானசம்பந்தனாய் நானும் இல்லை
அப்பன் அடித்திருந்தால் அல்லித் தண்டால் அடித்திடுவாய்
அம்மான் அடித்திருந்தால் அலரித் தடியால் அடித்திடுவாய்
எத்தனை எத்தனை அடிகள் அத்தனையும் அன்பு மழை வரிகள்
தாலாட்டின் இனிமை கேட்டு உன் மடியில் உறவறிந்தேன்       
இன் நாளில் நீ இல்லை நான் உறங்க உன் மடி இல்லை
அணைத்தவரே அடித்துவிட்டார் அன்பு செய்ய யாரும் இல்லை
அத்தனை ஜீவனையும் நீயே அடித்துவிடு மனசாறி நான் மகிழ்ந்து
இமை மூடி  உறங்கிடுவேன்
தென்னை இளங்கீற்றில் தென்றலுக்கும் சொந்தம் இல்லை 
அன்னை நீ இன்றி ஆனந்தம் எனக்கில்லை
இருள் வந்து இமை மூட விழி உறங்கி நாளாச்சே
அம்மா என் தாயே என் விழி உறங்கி நாளாச்சே
தாலாட்ட வருவாயா தாயே என் தாயே.......     
Kavignar Valvai Suyen 

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...