jeudi 18 janvier 2018

ஏகாந்தனே உன்னை மறவேனே....


கருவறை கிடந்து கால் நடையென தவழ்ந்து
ஈரடி எழுந்து கூடலும் ஊடலுமாய்
கடுகளவே ஆயினும்
கடல் மடி நினைந்து
ஆசா பாசமும்
அடிபணி வாழ்விலும்  
நரை திரையாகி
கானக இருளில்
மூன்று காலூன்றி
நீழ் துயில் கொள்ளும் காலமும்
நின்னடி தொழுதே காடேகி செல்வேன்
ஏகாந்தனே உன்னை கணமும் மறவேனே

பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...