jeudi 14 décembre 2017

தேவ தேவா உன் தேவி இங்கே ...

வாழ்வும் தாழ்வும் ஏன்தான் அன்பே
வாழ்வோம் வா
வாசம் போகா வாடா மலர்
உன் தோழில் சேரத்தான்
தேவ தேவா உன் தேவி இங்கே
வாழ்வும் தாழ்வும் ஏன்தான் அன்பே
வாழ்வோம் வா....

மாலை சூடும் மணநாள்
மரணத் தேதி பார்ப்பதோ
வேதம் ஓதும் வேதியர்
வேண்டித் தவம் கிடப்பதோ
உந்தன் குயில் பாடுதே
எந்தன் குரல் கேட்கிதோ
மஞ்சம் கண்டு கொஞ்சத்தான்
மலர்கள் இங்கே பூர்க்கிதே
கோதும் விரல் இன்றித்தான் கேசம்
வாடும் கன்னம் தழுவி ஏங்கிதே
மீட்டும் விரலேவா வீணை அழைக்கிதே
தேவ தேவா உன் தேவி இங்கே
வாழ்வும் தாழ்வும் ஏன்தான் அன்பே
வாழ்வோம் வா....

தேனை தேடும் வண்டுகள் தேகம் மெல்ல கடிக்கிது
வாழ்வும் வளமும் காணத்தான் வாசல் இங்கே திறக்கிது
மனங்கள் ரெண்டும் சேர்ந்திட மாலை தென்றல் வீசுது
மனமும் மனமும் ஒன்றிய நாணல் இங்கே ஓடுது
உதயம் இல்லா விழிகளே விழிகளே
உறவில் விரிசல் வீழ்ந்ததேன் வீழி காய்ந்ததேன்
வர்ண்ணம் குலைந்த ஓவியமோ வாராய் கண்ணா
தேவ தேவா உன் தேவி இங்கே
வாழ்வும் தாழ்வும் ஏன்தான் அன்பே
வாழ்வோம் வா
வாசம் போகா வாடா மலர்
உன் தோழில் சேரத்தான்...

பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...