lundi 22 juin 2015

இன்று நான் நாளை நீ...


ஆளுமை விட்டு அகல்வதில்லை அன்பு
தேனீக்கள் தந்த காயம் கண்டும்
மயங்குகின்றன
நேசம் கொன்ட மலர்கள்..
தொட்ட இடம் இனிக்க
நினைவுப் பொதிகள்
நெஞ்சறைக்குள்
சுமையின் கனமோ
நடு இராத்திரி இருளுக்குள்
அஞ்சவில்லை!
இரவு கழிந்து விழிக்குத் துணையாக
விடியல் கண்டு உலகை சுற்றுகின்றன
பட்டாம் பூச்சிகள்
பொம்மை விளையாட்டில்
இன்று நான்... நாளை நீ...
கட்டுப்பாடில்லா தட்டுப்பாடு
சுட்டாலும் சும்மா கிடக்கிதில்லை
ரணங்கள் தொட்ட பின்பே
குணங்கொள்கிறது குன்றேறி...
Kavignar Valvai Suyen

4 commentaires:

  1. Réponses
    1. நண்பரே திண்டுக்கல் தனபாலன் சரிதான் அருமையென உரைத் தலைமை தந்தீர்கள் உங்களன்பு மிகையானது நன்றி...

      Supprimer
  2. ''...நேசம் கொன்ட மலர்கள்.. மயங்குகின்றன
    பொம்மை விளையாட்டில்
    இன்று நான்... நாளை நீ........''
    நிலையற்ற வாழ்வின் நிசம்.

    RépondreSupprimer
    Réponses
    1. நன்றி சகோதரி வேதாக்கா நிலயற்ற வாழ்வின் முலாம் அற்ற தண்ணீர் கண்ணாடிகள் நாங்கள்...

      Supprimer

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...