கடமை எண்ணி கடிகாரமாய்
ஓடிக் கொண்டிருந்தேன்
கனதியான வாழ்க்கை !
ஓய்ந்தாலும்
என்னை எழுப்பிவிடும் கடிகாரம்
ஓர் நாள் என்னை எழுப்ப மறந்து
அது ஓய்ந்திருந்தது
அடித்துவிட்டேன் அதனை
ஆனால் இன்றோ
அலாரம் அடித்துக் கொண்டே இருக்கிறது
முற்றாக ஓய்ந்துவிட்டேன் என்பதை
அறியாமலே அது!
அழைப்பாணை இன்றி
என்னை அழைத்து வந்த இயமன்
கடிகாரத்தை பார்த்து
சிரித்துவிட்டே வந்தான்
பாவலர் வல்வை சுயேன்
Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...