கரைகளை தொட்டுச் செல்லும்
அலையே
நீ கடலிடம் சொல்லும் சேதி
என்ன
என் மொழி நீ அறிவாய்
உன் எண்ணம் நான் அறியேன்
வான்மழை தரும் நன்னீர்
மேன்மை உற்றும்
மானுடன் சிந்தும் கண்ணீர்
கரையை
தொட்டுச் செல்லும் உன்னால்
உப்புக் கரிக்கிறது கடல்
நேற்றைய காற்றில் வீசப்பட்ட
புழுதி நான்
கால சமுத்திரத்தை கடந்திட
நீந்துகிறேன்
முடியவில்லை என்னால்
கன்னத்தில் வழியும் சங்கமத்
துளியில்
பாவலர் வல்வை சுயேன்
Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...