mercredi 10 avril 2019

ஏதறிவாய் ஜீவனே !!!


மாயை சூடும் வர்ண வாழ்வே
அறிவேன் உன்னை அஞ்சேன்
அன்பு நிலையும் அறுவடை சாவும்
கண்கள் கனன்று சொரிய
எழுகின்றோம் வீழ்கின்றோம்
எண்ணில்லை என் செய்வோம்

ஆசைத் தூறலில் அழிந்தே வீழும் கூடுது
கட்டை எரிந்திட கல்லறை சிரித்திட
புழுவாகி பூடாகி புழுத்தலில் 
உருகும் ஜீவனுக்கு
இகபர வாழ்வு இனிப்பா கசப்பா
தேடுகிறேன், எழுதிய புத்தகம் எங்கே
எட்டவில்லை!
தத்துவ ஞானம் தாளா நின்று
மீளா பொய்கை விட்டகல்வேன்
விடை கொடு விரும்புகிறேன்

பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...