dimanche 1 juillet 2018

பீனிக்ஸ் பறவையே உன் பள்ளி வருகிறேன்


மலரென நினைத்தே அணிகலன் செய்தேன்
மனசை கொன்று போனதேன் மணிப் புறா
காலச் சூழல் காற்றின் திசையே
வேடந் தாங்கல் வாழ்வுக்கு நிழலே
கூடும் இல்லை குஞ்சும் இல்லை
கொத்திப் போனதேன் வந்த புறா

பீனிக்ஸ் பறவையே உன் பள்ளி வருகிறேன்
பால் வேறு நீர் வேறு வேறென தெரியலையே
சுட்ட மனம் தோப்பாக பட்ட மனம் நீறாக
போனது போகட்டும் புறம் தள்ளி எழுகிறேன்
நிலாவும் ஓர் நாள் இல்லாது போவதுண்டு
கலங்கும் வானமும்
கண்ணீர் கோலமே
ஆறாக் காயம் எழுதா வடுவில்
பாளும் மனசே தணிந்தெழு
வேடம் தாங்கலும் வேதனை வாழ்வே

பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...