lundi 24 juillet 2017

பிடி சாம்பலே மேனி !!

வாழ்ந்து வெல்லவே வாலிபம்
வாழ்ந்ததை நெய்யவே வெள்ளி முடி
மழலை பருவ மாலை கட்டி
மீழ் நினைப்பில் தோளில் இட்டேன்
துளித் துளியாய் விழித் துளிகள்
தூறல் உதிர்வில் எத்தனை முகங்கள்
பட்ட கடன் இன்னும் தீர்க்கலையே
பாடை விரிப்பில் ஆயுசின் அணைப்பு

பெற்றவர் உறங்க விரித்த படுக்கை
பிள்ளை எனக்கும் பெருமிதமே
மரண அறிவித்தல் ஊரார் செவியில்
விறகுக் கட்டில் சுடலை கோடியில்
திறந்த விழிகளை மூடிவிட்டு
கூடி வந்தோரும் குறுகியே சென்றார்
ஆறத் தழுவிய அக்கினியே
உனக்கும் ஆறாப் பசியே
நீ அள்ளித் தின்று செரித்தது போக
பிடி சாம்பலே மேனி
அஸ்த்தி என அதையும்
கரைத்திட்டார் சமுத்திரத்தில்

பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...