mardi 22 novembre 2016

என் மண்ணுக்குத் தனி வாசம் !!!!



ஊருக்கு ஒரு வாசம் என் மண்ணுக்குத் தனி வாசம்
மாவீரர் முகம் தோணுதே தமிழாலே காந்தழ்
கதிர்ச் சோலை பூத் தூவுதே.. ..
புயல் எழுமோ இன்னும் இடி விழுமோ
இதயத்தை இடம் நீக்கி இனி ஒரு விதி தருமோ
வீரம் விடிவிற்கே விதையானதே
காலம் உருமாற்றி ஒளிக்கீற்று விழி காணுதே
உனக்குள்ளே வாழுது தமிழா
உன் சோதரர் உயிரே அது
உரம் இட்டு நீர் ஊற்று
உன் தாயகம் உனக்கே அது
மாவீரர் முகம் தோணுதே தமிழாலே காந்தழ்
கதிர்ச் சோலை பூத் தூவுதே.. ..
கவி எழுதி சுரம் மீட்டு புவி மீட்க களம் பொருது
வங்கத்திலும் வெடியானதே வேங்கை
வெண்சங்காய் தினம் வாழுதே
ஊரெல்லாம் ஒரே வாசம் தமிழீழப் பூ வாசம்
காந்தழ் உலகெங்கும் உயிரானதே
தயங்காதே தமிழா தமிழீழம் உனதாகிதே
காந்தழ் கதிர்ச் சோலை பூத் தூவுதே
ஊரெல்லாம் ஒரே வாசம் தமிழீழத் தனி வாசம்
மாவீரர் முகம் தோணுதே தமிழாலே காந்தழ்
கதிர்ச் சோலை பூத் தூவுதே..


பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...