lundi 11 juin 2018

கட்டில்கள் அழுகின்றன !!!


மின்னும் சிற்றாடையில் வண்ணம் தூவும் வரிவளையே
உத்தமரும் உன்னருகே  ராத்திரி வித்தகரே ஊருக்குள்ளே 
வளர் நிலா விளக்கேற்றி 
வஞ்சி நீ வண்ணம் மின்னி
நாணத் திரை நகல் அகற்றி
கூந்தல் திரை போர்த்துகிறாய்
செம் பவள பெட்டி தனில் தேடும் சுகம் காண்கயிலே
கௌரவம் பொய்த்ததடி கரு வண்டுகள் உன் காலடியில்
சீர் கொண்டு வருகிறார் சீதணம் கேட்கும் கோமான்களும்
செம்மஞ்சள் மின் மினியே விட்டில்கள் வீழ்ந்திட
கட்டில்கள் அழுகின்றன...

பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...