samedi 5 août 2017

கேழ்வியாய் வளைந்தேன் நானே !!!


நான் தமிழனா கேழ்விக்கணை
யாரும் தொடுக்கவில்லை
கேழ்வியாய் வளைந்தேன் நானே

எத்தனை எத்தனையோ எரிப் பிளம்புகள்
என்னைச் சுற்றி தணியாத் தாகத்துடன்
சிங்கள ஏகாதிபத்திய படைகளின் கணைகள்
எமது குடியிருப்புகளை எரித்து
எம்மையும் வீழ்த்தின
சுயம் இளந்த நினைவலை திரும்பிய வேளை

இராணுவ வண்டிக்குள் வீசப்பட்டுருந்தேன்
சிறிசு பெரிசென்ற பேதம் இல்லை
ராணுவ வண்டிக்குள் மானுடக் குவியல்
ரெத்தம் கொட்டி சங்கமித்து உறைந்திட
கண்களின் ஈரம் காயவில்லை

எங்கள் ஊர் மதவருகே அண்மித்தது
அந்த அராயக ராணுவத் தொடர்
இடியாய் ஒரு மனித வெடி
தன்னை ஈகம் தந்தான்
தமிழீழத் தாயின் மைந்தன்
மகே அம்மே கொட்டியா என்ற ஓலம்
தொலைவில் வீசப்பட்டேன்

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
உலகத்தமிழினமே உச்சரித்த மந்திரம்
நச்சரித்து அழிகின்றது இன்றந்த வேதம்
தற் கொடைவான்களே
மன்னியுங்கள்
முற்சக்கர வண்டியில் முடமே நான்
சாம்பிறாட்சிய அவையில்
இன்னும் ஈனத்தோரின் இழி நிலையே
எறிகணை ஒன்று தருவீரா எனக்கு
அறிவேன் உங்கள் ஆதங்கத்தை

பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...