mercredi 14 janvier 2015

இனிய தைத்திங்களின் பொங்கல் நல்வாழ்த்துகள்..

தைத்திருநாள் இன்று வந்ததடி பொங்கல் என்று
பாசிப்பயறு வறுத்து சக்கரை அமுது பொங்கி
பண்டிகை கொண்டாடி
பகிர்ந் துண்டு மகிழ்ந்திடவே...
 
தமிழீழ விடியலைத் தேடி போனவர்
வீடு திரும்பவில்லை
போகிப் பொங்கலில் பளையன கழியுதென
போனதை விடல்லாமா...
 
கொற்றவரெனும் கொடியவராலே
முத்தம் எங்கும் இன்னும்
ரெத்தம் காயாவில்லை
தைத் திருநாளின் தார்ப்பரியம் விட்டு
தன்மானம் சாகவில்லை
மங்கு சனியதனை மண்மேடாய் கொழுத்தி
பொங்கடா தமிழா தித்திப்பு பொங்கல்
 
இனச்சுத்தி கொலையில் ஈடான ஈழம்
காகித பூவாய் காய்ந்திடல்லாமா
வான்படை கண்ட வீரத் தமிழன்
சீருடை கொன்ட
வேங்கையின் வீரம் வீழ்ந்திடல்லாமா  
பண்ணுடைந்த யாழிணை
பண்ணிசைத்த பொங்கலே
தமிழர் திருநாளென
பொங்கு பொங்கு பொங்கு தமிழாய்
போர்மறை உயர்த்தி போகி கழித்து
மங்காச் சனியும் மங்கிச் சரியட்டும்
உலகப் பந்திலே தமிழீழம் மலரட்டும்
பண்டிகை கொண்டாடி
பகிர்ந் துண்டு மகிழ்வோம் நாம்
பொங்கடா தமிழா தித்திப்பு பொங்கல்..
Kavignar Valvai Suyen

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...